தீவிர வலைப்பயிற்சியில் தோனி அண்ட் கோ: வைரல் வீடியோ!!

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (08:21 IST)
ஐபிஎல்-க்காக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை சென்னை அணி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

 
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14வது சீசன், ஏப்ரல் 9 ஆம் தேதி துவங்கி மே 30 ஆம் தேதி நிறைவடைகிறது. ஐபிஎல் போட்டிக்குத் தயாராகும் வகையில் ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. 
 
சென்னை அணி கடந்த சில ஆண்டுகளாக இளம் வீரர்களைக் காட்டிலும் 30 வயதைத் தாண்டிய மூத்த வீரர்களையே தங்கள் அணியில் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இதனால் ரசிகர்கள் சிஎஸ்கேவை டாடீஸ் டீம் என கேலி செய்வது உண்டு. 
 
ஏப்ரல் 10ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதற்காக சிஎஸ்கே வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  
 
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஓய்வுபெற்ற நிலையில் தற்போது ஐபிஎல்-க்காக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை சென்னை அணி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

35 நாட்களில் பரிசுக்கு மட்டுமே 17.7 கோடி செலவு செய்த ஹர்திக் பாண்டியா!...

வைபவ் சூர்யவன்ஷி சின்னப்பையன்.. அதற்குள் எதற்கு இந்திய அணியில்? அஸ்வின் ரவிச்சந்திரன்

முதல் போட்டியில் படுதோல்வி அடைந்த சிஎஸ்கே.. ருத்ர தாண்டவம் ஆடிய வைபவ் சூரியவன்ஷி..!

இந்த ஐபிஎல் சீசனில் 300 ரன்கள் நிச்சயம் உண்டு.. ரவிச்சந்திரன் அஸ்வின் கணிப்பு..!

ஐபிஎல் தொடரில் தோனி விளையாட மாட்டார்.. சிஎஸ்கே அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments