Publish Date: Sat, 24 Oct 2020 (23:51 IST)
Updated Date: Sat, 24 Oct 2020 (23:54 IST)
ஐபிஎல் -2020 தொடர் மக்களுக்கு சுவாரஸ்யம் அளிக்கும் வகையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய போட்டியில் இன்று 7:30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் பந்து வீச்சுத் தேர்வு செய்தார்.
முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி பேட்டிங் செய்யவுள்ளதால் இன்றைய போட்டி மேலும் பரபரப்பாக இருக்கும் எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இன்று 126 ரன்களை எடுத்து, ஹைதராபாத் அணிக்கு 127 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
பஞ்சாப் பேட்டிங்கில் கைகொடுக்கவில்லை என்றாலும் பந்து வீச்சில் அசத்துமா என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
அதேபோல் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.