இந்திய அணியில் சூர்யக்குமார் யாதவ் ஏன் இல்லை? சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி!

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (17:14 IST)

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் சூர்யக்குமார் யாதவ்வுக்கு இடம் அளிக்கப்படாதது குறித்து ஹர்பஜன் சிங் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணிக்காக வீரர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். இதில் வருண் சக்கரவர்த்தி, சஞ்சு சாம்சன், முகமது சிராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் மும்பையை சேர்ந்த சூர்யகுமார் தேர்வு செய்யப்படாதது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுபற்றி சமூகவலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

அதில் ‘ லிமிடெட் ஓவர் போட்டிகளில் இந்திய அணிக்கு அவசியம் தேர்வு செய்யப்பட வேண்டியவர் சூர்யகுமார் யாதவ். ஐபிஎல் மற்றும் டொமஸ்டிக் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதமான விதிமுறை என நினைக்கிறேன்.பிசிசிஐ தேர்வுக் குழுவினர் தயவுசெய்து சூர்யகுமார் யாதவின் சாதனைகளைப் கவனிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே போட்டியில் 2 உலக சாதனை.. நமீபியாவுக்கு எதிராக போட்டியில் இந்தியா அசத்தல்...!

93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.. ஏ பிரிவில் முதலிடம்..

ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக தோனி தொடர்ந்த மான நஷ்ட வழக்கு: தோனி ரூ.10 லட்சம் செலுத்த நீதிமன்றம் உத்தரவு..!

உலகக்கோப்பை டி20.. SA vs AFG.. சூப்பர் ஓவரிலும் சமமான ரன்கள்.. 2வது சூப்பர் ஓவரில் நடந்த அதிசயம்..

ராகுல்காந்தியை சந்தித்த சச்சின்.. பிரதமர் மோடியை சந்தித்த ஜடேஜா! இருவருக்கும் என்ன காரணங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments