Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற ராஜஸ்தான்: முதல் ஓவரில் விக்கெட்டை இழந்த பஞ்சாப்!

Webdunia
திங்கள், 25 மார்ச் 2019 (20:24 IST)
ஐபிஎல் போட்டியின் 4வது ஆட்டம் இன்று பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரஹானே டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து பஞ்சாப் அணி தற்போது பேட்டிங் செய்து வருகின்றது
 
இந்த நிலையில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே பஞ்சாப் அணியின் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தார்., அவர் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் குல்கர்னி பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணி சற்றுமுன் வரை 5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்துள்ளது,
 
ராஜஸ்தான் அணியில் இன்று ஸ்டீவன் ஸ்மித் களமிறங்கியுள்ளது அந்த அணிக்கு பெரும் பலமாக உள்ளது. அதேபோல் பஞ்சாப் அணியில் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்ட் கெயில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments