MI VS RCB: ப்ளே ஆப் சுற்றுக்கு நுழைய கடும் போட்டி...

Webdunia
செவ்வாய், 1 மே 2018 (12:48 IST)
நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், இன்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகிறது. இது 8 அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகளில் 31 வது லீக் ஆட்டமாகும். 
 
மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 7 ஆட்டத்தில் ஆடி 2 வெற்றி, 5 தோல்வி கண்டுள்ளது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 7 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்வி அடைந்துள்ளது. 
 
பெங்களூர் அணி இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. கடந்த போட்டியில் அணியின் பந்து வீச்சு மற்றும் பீல்டிங் மோசமாக இருந்தது. அதனை சரி செய்ய வேண்டிய நிலையில் பெங்களூரு அணி உள்ளது. 
 
இரு அணிகளுக்கும் இன்னும் 7 ஆட்டங்களே எஞ்சி இருக்கிறது. அதில் 6 ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். எனவே இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். இன்று இரவு 8 மணிக்கு போட்டி துவங்கவுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவர் வரை சென்ற த்ரில் போட்டி.. 254 இலக்கை நெருங்கிய இங்கிலாந்து.. நூலிழையில் இந்தியா வெற்றி..!

இதுவரை ஜெயித்தது பெரிதில்லை.. இன்னும் 2 போட்டிகளில் ஜெயிக்க வேண்டும்: இந்திய அணியின் பயிற்சியாளர்

அரையிறுதி, இறுதி போட்டின்னாலே தெ.ஆப்பிரிக்காவுக்கு அலர்ஜி.. இன்னொரு தோல்வி..!

அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்துவது எங்களுக்கு ஸ்பெஷல்.. இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக்..!

தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் ஐபிஎல் போட்டி இல்லையா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments