Webdunia - Bharat's app for daily news and videos

Install App

KXIP vs KKR: கெயில் வேகத்தை சமாளிக்குமா கொல்கத்தா?

Webdunia
சனி, 21 ஏப்ரல் 2018 (15:07 IST)
இன்று மாலை 4 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.
 
இந்த போட்டி, கொல்கத்தா அணியில் இருக்கும் ஆந்த்ரே ரஸ்ஸல் மற்றும் பஞ்சாப் அணியில் இருக்கும் கிறிஸ் கெயில் ஆகியோர் இடையிலான நேரடி மோதலாக பார்க்கப்படுகிறது.
 
சமீபத்தில் நடந்து முடிந்த போட்டியில் கெயில் தனது அதிரசி ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஹைதராபாத் அணிக்கு முதல் தோல்வியை கொடுத்தார். அதோடு, இந்த சீசனில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். 
 
இன்று நடைபெறும் மோதலில் சுழற்பந்து வீச்சாளர்களான சுனில் நரேன், குல்தீப், பியூஸ் சாவ்லா, நித்திஷ் ராணா ஆகியோரிடம் இருந்து சவால்களை கிறிஸ் கெயில் எதிர்கொள்ளக்கூடும். 
 
ஆனால், கே.எல்.ராகுல், மயங்க் அகவர்வால், கருண் நாயர் ஆகியோரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் சளைத்தவர்கள் இல்லை. ஆரோன் பின்ச், யுவராஜ் சிங் ஆகியோர் இருப்பதும் கூடுதல் பலம்.
 
இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகளாகவே உள்ளனர். எனவே, இன்றைய போட்டி ரசிகர்களின் அதிக எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெரும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

இந்த சீசனோடு ஓய்வா?... தோனி எடுத்த முடிவுதான்.. வெளியான தகவல்!

கோலியைக் கௌரவிக்கும் விதமாக RCB ரசிகர்கள் செயல்…! இன்றைய போட்டி முழுவதும் வெள்ளை ஜெர்ஸிதான்!

”RCBகிட்ட கப் இல்லைன்னு யார் சொன்னது?” ண்ணோவ்.. சும்மா இருண்ணா! - படிதார் பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

ஜடேஜாவைக் கேப்டனாக்குங்கள்… இளம் வீரர் வேண்டாம் -அஸ்வின் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments