Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரவோவிற்கு தோனி கூறிய அறிவுரை என்ன? இதுதான் வெற்றிக்கு காரணமா?

Webdunia
திங்கள், 23 ஏப்ரல் 2018 (12:41 IST)
ஐபிஎல் 11 சீசன் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியினரும் மோதினர். இதில், சிஎஸ்கே 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன் எடுத்தது. அம்பதி ராயுடு 37 பந்தில் 79 ரன்னும் (9 பவுண்டரி, 4 சிக்சர்), ரெய்னா 43 பந்தில் 54 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் டோனி 12 பந்தில் 35 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.
 
பின்னர் விளையாடிய ஐதராபாத் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்தது. கேப்டன் வில்லியம்சன் 51 பந்தில் 84 ரன்னும் (5 பவுண் டரி, 5 சிக்சர்), யூசுப்பதான் 27 பந்தில் 45 ரன்னும் (1 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். 
ஆட்டத்தின் கடைசி ஓவர் வரை யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற பரபரப்பு இருந்தது. போட்டியின் கடைசி ஓவரை பிரவோ வீசினார். முதல் 3 பந்தில் 3 ரன்னே கொடுத்தார். இதனால் கடைசி 3 பந்தில் 16 ரன் தேவைப்பட்டது. 4வது பந்தில் சிக்சர் பறந்தது. கடைசி 2 பந்தில் 10 ரன் தேவைப்பட்டது. 
 
அப்போது தோனி பிராவோவுக்கு ஆலோசனை வழங்கினார். கடைசியில் சிஎஸ்கே த்ரில் வெற்றி பெற்றது. இது குறித்து தோனி கூறியதாவது, அனுபவ வீரராக இருந்தாலும் பிராவோவுக்கு சில நேரம் ஆலோசனை தேவைப்படுகிறது. 
 
2 பந்துகள் இருக்கும் போது அவரிடம் திட்டத்தை மாற்ற சொல்லி ஆலோசனை வழங்கினேன். பந்தை வேறு மாதிரி போட சொன்னேன். அவரும் கடைசி பந்தை யோக்கராக மாற்றினார். இதனால்தான் வெற்றி பெற முடிந்தது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

ரோஹித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிசிசிஐ அழுத்தம்தான் காரணமா?... ராஜீவ் சுக்லா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments