Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாளம்மைக்கு ஹோமியோ சிகிச்சை

Advertiesment
தாளம்மைக்கு

Webdunia

உமிழ் நீர் சுரப்பிகளில் வீக்கத்துடன் உண்டாகும் தீவிரமான தொற்று நோய் தாளம்மை என்று அழைக்கப் படுகிறது, சாதரணமாக இது பொன்னுக்கு வீங்கி என்று அழைக்கப் படுகிறது.

காரணங்கள் :

பாரா இன்ஃப்ளுயன்ஸா ஒன்று மற்றும் இரண்டு என்ற எண்ணுள்ள வைரஸதொற்றிக் கொள்வதால் இந்த நோய் உருவாகிறது. இந்த வைரஸசுரப்பிக் கோளங்களையும், நரம்புத் திசுக்களையும் தாக்கும் திறனுடையது. உலகின் எல்லா நாடுகளிலும் தாளம்மை நோய் ஏற்படுகிறது. சில பாகங்களில் தாளம்மை நிரந்தர தொற்று நோயாகவும் உள்ளது. இது பெரும்பாலும் குழந்தைகளுக்கு வருவது என்றாலும் முதியவர்களுக்கு அறவே வராது என்று கூற முடியாது. பெரும்பாலும் இது இளவேனிற் காலங்களில்தான் பரவுகிறது என்றாலும் மற்ற பருவங்களிலும் இந்த நோய் தொன்றுகிறது.

இந்த நோய் கிருமிகள் நோயுள்ள ஒருவரிடமிருந்து மற்றவருக்கு வாய், மூக்கு, வழியாக காற்றின் மூலம் பரவுகிறது. நோயுள்ளவர்கள் இருமினாலும் தும்மினாலும் வெளிப்படும் காற்றுத் திவலைகள் மூலம் இந்த நோய்க் கிருமிகள் அடுத்தவரைத் தொற்றிக் கொள்கின்றன. நோய் தொற்றியவுடன் குருதியில் வைரஸகிருமிகள் அதிகரிக்கிறது. இதனால் சுரம் உண்டகிறது. இவ்வைரஸ்கள் வாய்ப் புறச் சுரப்பி கோளங்களையும், நரம்பணுத் திசுக்களையும் நாடிச் சென்று தொற்றிக் கொள்கிறது.

நோய்க்குறிகள் :

1. மனித உடலில் நோய தொற்றிய பிறகு நோய் முதிர்காலமாக 18 முதல் 20 நாள் ஆகும்.

2. பெரும்பாலும் தாளம்மை நோயில் தாடையில் உள்ள உமிழ்நீர் சுரப்பி வீக்கமடையும். அதனால் அங்கு உள்ள தோல் பளபளப்பாகத் தோன்றும்.

3. தாடை வீக்கம் தான் இந்நோயின் முதல் அறிகுறியாகும்.

4. இந்நோய் தோன்றுமுன் லேசான சுரம் மற்றும் நடுக்கம் ஏற்படலாம். காது வலி, முக நரம்பு மற்றும் வாயினை மெல்ல உதவும் தசைகளில் வலி தோன்றலாம்.

5. தாளம்மை வீக்கம் இரண்டு மூன்று நாட்களில் வடிந்து விடும்.

6. மீண்டும் ஓரிரு நாளில் அடுத்தப் பக்கத்துக் கன்னத்தில் வீக்கம் தோன்றலாம்.

7. இதுபோன்ற நிலை ஏழு அல்லது எட்டு நாட்கள் இருக்கும்.

8. உணவைப் பார்த்த உடன் உமிழ் நீர் சுரக்கும். வீங்கி இருக்கும் உமிழ்நீர் சுரப்பி சுரக்கும்போது கன்னத்தில் வலி தோன்றுகிறது.

9. வாயை மெல்ல உதவும் நரம்புகளில் வலி இருக்கும். கழுத்தைச் சுற்றி இருக்கும் நிணநீர் கட்டிகள் வீக்க முற்றிருக்கும். வாழ்வில் ஒரு முறை தாளம்மை வந்து விட்டால் பிறகு வாழ்நாள் முழுவதும் அந்நோய் திரும்ப வர வாய்ப்பில்லை.

இந்நோயினால் ஏற்படும் சிக்கல்கள் :

1. ஆண் குழந்தைகளுக்கு விதையழற்சி (Orchits) ஏற்படலாம். இதன் காரணமாக வெகு சிலருக்கு விந்தணு உற்பத்தி பிற்காலத்தில் இல்லாமல் போய்விடுகிறது. பெரும்பாலும் ஒரு பக்கத்தில் உள்ள விதையில் மட்டுமே பாதிப்பு ஏற்படும். அரிதாக ஒரு சில ஆண்களுக்கு இரு விதைகளிலும் பாதிப்பு ஏற்பட்டு விந்தணுக்களே உற்பத்தியாகாமல் ஆண் மலடாக ஆகிவிடுகிறார்கள்.

2. பெண்களக்கு சினைப்பையழற்சி (ஒரு பக்கத்தில் மட்டும்) ஏற்படலாம்.

3. பெண்களுக்கு கணைய அழற்சியும் ஏற்படலாம்.

மருத்துவம் : பொத

1. நோயாளரை தனி அறையில் தனித்துத் தங்க வைக்க வேண்டும்.

2. நீர்ம உணவு மட்டுமே கொடுக்க வேண்டும். நோயின் கடுமையைக் குறைக்க "பரோடிடினம்-30" என்ற ஹோமியோபதி மருந்தைத் தர வேண்டும்.

மருந்துகள்

1. பெல்லடோனா :- தாளம்மையினால் காய்ச்சல், நரம்புக் கோளாறு, உமிழ் நீர் கோளங்களில் வீக்கம், கன்னம் சிவந்து, வீங்கி, மிகவும் வலியுடன் இருக்கும். வலதுபுறம் படுக்க இயலாத வலி, துடிக்கும் தலைவலி மற்றும் சன்னி போன்ற நிலைகளில் இம்மருந்து நல்ல பலனைக் கொடுக்கும்.

2. மெர்க்கூரியஸ் :- இது தாளம்மைக்கு முக்கியமான மருந்து. கன்னத்தின் அடிப்பகுதியிலும் தாடையிலும் வீங்கி, மென்மையான தோற்றம் இருக்கும். லேசானக் காய்ச்சல் இருக்கும், கெட்ட நாற்றம் வீசும் நிலைகளில் இம்மருந்தைக் கொடுக்க குணமாகும்.

3. பல்சடில்லா :- தாளம்மை வைரஸ், உமிழ் நீர் சுரப்பிகளிலிருந்து கிளம்பி நிணநீர் சுழற்சி மூலமாக (Lymphatic circulation) பிற உறுப்புகளைச் சென்றடையாமல், (Prevents metastasis) குறிப்பாக ஆணின் விதை அல்லது பெண்ணின் சினைப் பையை அடைந்து தாக்கி மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தாமல் தடுக்க வல்ல மருந்து இது.

4. ருஷ்-டாக்ஸ் :- தாளம்மை நோய் நீங்கிய பிறகு, இரண்டாம் நிலைத் தொற்றாக (Secondary infection) அக்கி (Erisipelas) குடற்காய்ச்சல், பேதியாதல், கடுமையான உடல் வலி ஆகியவைகள் ஏற்படாமல் தடுக்க வல்லது. இவைகளைத் தவிர "பைலோகார்பின்" "கோனியம்" மற்றும் "லெகெசிஸ்" போன்ற மருந்துகளும் தேவைப்படலாம்.

Share this Story:

Follow Webdunia tamil