Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்செந்தூரில் மாசிப்பெருவிழா. கொடியேற்றம் தேதி அறிவிப்பு..!

Mahendran
திங்கள், 24 பிப்ரவரி 2025 (18:26 IST)
திருச்செந்தூரில் ஒவ்வொரு வருடமும் மாசி பெருவிழா சிறப்பாக நடைபெறும் நிலையில், இந்த ஆண்டு மாசி பெருவிழா மார்ச் 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுவாமி திருக்கோயிலில் மாசி பெருவிழா மார்ச் 3ஆம் தேதி முதல் மார்ச் 14ஆம் தேதி வரை நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
மேலும், மாசி பெருவிழாவின் பத்தாவது நாளான மார்ச் 12ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மாசி 11ஆம் நாள், மார்ச் 13ஆம் தேதி காலை 10 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறும். அன்றைய தினம் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, சுவாமி தெப்பத்தில் 11 சுற்றுகள் சுற்றி வருவார் என்றும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 
மாசி பெருவிழாவுக்கு திருச்செந்தூருக்கு அதிக பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்கள்.. என்னென்ன அபிஷேகம் செய்தால் என்ன பலன்கள்?

இந்த ராசிக்காரர்களுக்கு கூட்டு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (21.02.2025)!

மகா சிவராத்திரி விரதம் இருக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலை விரிவு செய்யும் வாய்ப்பு உண்டாகும்! - இன்றைய ராசி பலன்கள் (20.02.2025)!

வயலூர் முருகன் கோவிலில் கும்பாபிஷேகம்.. பக்தர்களின் அரோகரா கரகோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments