Publish Date: Sat, 13 Jan 2024 (18:39 IST)
Updated Date: Sat, 13 Jan 2024 (18:41 IST)
சென்னையிலுள்ள வடபழனி முருகன் கோவில் மிகவும் பிரபலமான முருகன் கோவில்களில் ஒன்றாகும். இது சென்னை முருக பக்தர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இக்கோவில் 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. முருகன், இங்கு வள்ளி மற்றும் தெய்வானையுடன் வழிபடப்படுகிறார். கோவில் தினமும் அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை மற்றும் திருக்கார்த்திகை ஆகிய திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும்
இந்த கோவில் 7 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்தைக் கொண்டுள்ளது. கோவிலுக்குள் மூன்று பிரதான சன்னதிகள் உள்ளன. முருகன், வள்ளி மற்றும் தெய்வானை எனவும், கோவிலுக்குள் விநாயகர், சிவன், பெருமாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பல துணை தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன. கோவில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
சென்னைக்கு செல்லும் பக்தர்கள் நிச்சயமாக வடபழனி முருகன் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.