Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முகப்பருக்களை போக்க உதவும் சில எளிய மருத்துவ குறிப்புகள்....!!

Acne
, புதன், 6 ஜூலை 2022 (12:26 IST)
பரு வந்து விட்டால் அதை நகம் படாமல் பாதுக்காப்பது நல்லது. சிலர் பருவை கிள்ளி விடுகின்றனர். அவ்வாறு செய்தால் பரு மேலும், மேலும் அதிகமாகிக் கொண்டு தான் போகுமே தவிர குறையாது.


பரு வந்து விட்டால் அதை கிள்ள கூடாது. அத்துடன் கொழுப்புப் பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். உதாரணமாக தயிர், மாமிசம், சாக்லெட், ஐஸ்க்ரீம், எண்ணெய்யில் வறுத்த மற்றும் பொறித்த பலகாரங்களை சாப்பிடக் கூடாது.

பரு உருவாக இன்னொரு முக்கியக் காரணம் மலச்சிக்கல். இந்த மலச் சிக்கலை போக்க தினமும் உணவில் கீரைகளை சேர்த்துக் கொள்வது நல்லது. இது தவிர ஒருநாளைக்கு குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

அடிப்படையில் ஆரோக்கியமான தூக்கத்தை கடை பிடிப்பது நல்லது. பச்சைத் தண்ணீரில் குளித்து அதிக எண்ணெய் இல்லாத உணவை சாப்பிடுவது நல்லது. பயத்தம் பருப்பு போட்டுக் குளித்தால் எந்தத் தோல் சம்பந்தமான எந்த வியாதியும் நம்மை நெருங்காது.

ஆயுர்வேத சோப்புகள் போட்டுக் குளித்தாலும் பரு உண்டாவதை தடுக்கலாம்.  அதுபோல செயற்கையான க்ரீம், பவுடர் இவற்றுக்குப் பதிலாக, துளி பாலோடு முகத்தில் தடவிக் கொண்டு, பிறகு கழுவினால் முகம் பளபளப்பாக மெருகேறி இருக்கும்.

தேனுடன் சிறிது லவங்கப்பட்டை தூளைச் சேர்த்து முகத்தில் தடவலாம். கடுகை சிறிது தேனுடன் கலந்து முகத்தில் தடவலாம். அவ்வாறு தடவினால் முகப் பரு பிரச்சனை நம்மை அண்டாது.

மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுவது நல்லது. ஆனால் சோப்பு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தினமும் குளிக்கும்போது முகத்தில் சோப்புக்குப் பதில் பாசிப்பயறு மாவைத் தேய்த்துக் குளித்துவர முகம் பொலிவு பெறும். கரும் புள்ளிகள் மறையும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தான்றிக்காய் பொடியை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா...?