Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாம்பு விஷ முறிவு மருந்துக்குக் கடும் தட்டுப்பாடு

Advertiesment
பாம்பு விஷ முறிவு மருந்துக்குக் கடும் தட்டுப்பாடு
, செவ்வாய், 8 செப்டம்பர் 2015 (19:30 IST)
பாம்புக்கடி விஷத்தை முறிக்கும் மருந்துகளின் கையிருப்பு வேகமாக குறைந்து வருவதைத் தொடர்ந்து பாம்புக்கடியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று மெடிசன் சான்ஸ் ஃபிராண்டியர்ஸ் என்கிற சர்வதேச மருத்துவ தொண்டு அமைப்பு எச்சரித்துள்ளது.

ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் பாம்புக்கடியால் உலக அளவில் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் மூன்றில் ஒரு பங்கு இறப்புகள் சஹாரா பாலைவனத்திற்குத் தெற்கே இருக்கும் நாடுகளில் ஏற்படுகிறது.

சஹாரா பாலைவனத்துக்குத் தெற்கே அமைந்திருக்கும் நாடுகளில் பாம்புக்கடியின் விஷத்தை முறிக்கவல்ல ஒரே மருந்தின் தற்போதைய கையிருப்பு அடுத்த ஆண்டின் மத்தியில் தீர்ந்துவிடும் என்று எம்எஸ்எஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த குறிப்பிட்ட பாம்பு விஷ முறிவு மருந்தை தயாரிக்கும் ஃபிரென்ச் நிறுவனம் இந்த மருந்து தயாரிப்பை கடந்த ஆண்டு நிறுத்திவிட்டது.

இந்த மருந்து தயாரிப்பு வர்த்தக ரீதியில் தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதால் இதன் தயாரிப்பை நிறுத்துவதாக அப்போது அந்த நிறுவனம் காரணம் கூறியிருந்தது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil