Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா புஷ்பா கைது?: விரைவில் நடக்கலாம்!

சசிகலா புஷ்பா கைது?: விரைவில் நடக்கலாம்!

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2016 (09:38 IST)
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா முன்ஜாமீன் வக்காலத்தில் கையெழுத்து மோசடி செய்த வழக்கில் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வருகின்றன.


 
 
கடந்த 2011-ஆம் ஆண்டில் அவரது வீட்டில் வேலை செய்த இரண்டு பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர், மகன் மீது புகார் அளிக்கப்பட்டது.
 
இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, சசிகலா புஷ்பா தனது கணவருடன் சிங்கப்பூர் சென்றிருந்தபோது முன்ஜாமீன் வக்காலத்தில் எப்படி கையெழுத்திட்டார் என அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
 
இதனையடுத்து சசிகலா புஷ்பா உள்ளிட்டோரின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி வக்காலத்தில் மோசடியாக கையெழுத்திட்டது குறித்து போலீசார் சட்டப்படி வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.
 
இதனையடுத்து கோ.புதூர் போலீசார் சசிகலாபுஷ்பா, அவரது கணவர், மகன் மீது நீதிமன்றத்தை ஏமாற்றும் வகையில் ஆவணங்கள் தாக்கல் செய்தல், கையெழுத்தை மோசடியாக போட்டு போலி ஆவணங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட குற்றத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உயர் நீதிமன்ற கிளை உத்தரவின்பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் சசிகலா புஷ்பா கைது விரைவில் நடக்கலாம் என கூறப்படுகிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்