Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நஷ்டத்தில் இயங்கும் லக்‌ஷ்மி விலாஸ் வங்கி: ரிசர்வ் வங்கி அவசர நடவடிக்கை!

Webdunia
ஞாயிறு, 29 செப்டம்பர் 2019 (17:02 IST)
லக்‌ஷ்மி விலாஸ் வங்கி அதிக கடனால் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதால் அதன் மீது அவசர நடவடிக்கையை எடுத்துள்ளது ரிசர்வ் வங்கி.

லக்‌ஷ்மி விலாஸ் வங்கி தொடர்ந்து பலருக்கு கடன் கொடுத்ததாலும், அந்த கடன் பாக்கிகள் இன்னும் சரியாக வந்து சேராததாலும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. சமீபத்தில் லக்‌ஷ்மி விலாஸ் வங்கி நிர்வாகிகள் சிலர் ஊழல் குற்றசாட்டில் சம்பந்தப்பட்டிருப்பது வங்கிக்கு மேலும் பின்னடைவை தந்திருக்கிறது.

இதுப்போன்று நஷ்டத்தில் இயங்கும் வங்கிகளை ரிசர்வ் வங்கி தனது சிறப்பு கவனத்தில் எடுத்து செயல்பாடுகளை கவனிப்பது வழக்கம். அதன்படி ரிசர்வ் வங்கி லக்‌ஷ்மி விலாஸ் வங்கியின் மீது அவசர கால நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால் பெரிய நிறுவனங்களுக்கோ அல்லது தனி நபருக்கோ அதிகளவிலான கடன்களை அந்த வங்கியால் கொடுக்க முடியாது. புதிய கணக்கு தொடங்குதல், பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல் ஆகியவற்றிற்கு எந்த பிரச்சினைகளும் இருக்காது. தொழில் முதலீட்டு கடன்கள் குறிப்பிட்ட அளவு வரையில் பெறவும் முடியும்.

கடந்த ஆண்டிலிருந்து லக்‌ஷ்மி விலாஸ் வங்கியின் பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments