Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜியோவின் சேவை யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?

Webdunia
திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (17:55 IST)
ரிலையன்ஸ் ஜியோ பிராட்பேண்ட் சேவையானது யார் யாருக்கு வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரிலையன்ஸின் ஃபைபர் பிராட்பேண்ட் சேவையானது, வருகிற 2019 செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் செயல்பட துவங்கும் என ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார். 
 
இந்நிலையில், இந்த சேவையானது யார் யாருக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம், வழக்கம் போல ஜியோ ஃபைர் சேவையிலும் ஒரு வெல்கம் ஆஃபர் உள்ளது. இதன் கீழ் வாடிக்கையாளர்களுக்கு எச்டி டிவி அல்லது 4 கே எல்இடி டிவி ஒன்று இலவசமாக கிடைக்கும். 
உடன் வாடிக்கையாளர்கள் 4கே செட்-டாப் பாக்ஸையும் இலவசமாகப் பெறுவார்கள். ஆனால் இந்த இலவச எல்.ஈ.டி டிவி ஆனது நிறுவனத்தின் வருடாந்திர திட்டங்களைத் தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அல்லது நிறுவனத்தால் ஜியோ ஃபாரெவர் என்று கூறப்படும் திட்டங்களை பெறும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். 
 
மேலும், பயனர்கள் இணையதளத்தில் ஜியோ ஃபைபர் பிராட்பேண்டிற்காக முன்பதிவை நிகழ்த்த வேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது. முன் பதிவு செய்தால் மட்டுமே கிடைக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments