Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாதான் இலக்கு - விற்பனையாளர்களுக்கு வலை விரிக்கும் க்ளப் ஃபேக்டரி

Webdunia
திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (14:42 IST)
சீன ஆன்லைன் மார்க்கெட் நிறுவனமான க்ளப் ஃபேக்டரி தனது நிறுவனத்தை இந்தியாவில் வலுப்படுத்துவதற்காக விற்பனையாளர்களை கவரும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ஆன்லைன் விற்பனை தளங்களில் பிரபலமான நிறுவனம் க்ளப் ஃபேக்டரி. சீனாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த தளத்திற்கு இந்திய வாடிக்கையாளர்களிடையே கணிசமான ஆதரவு இருந்து வருகிறது. தற்போது இந்திய விற்பனையாளர்களை க்ளப் ஃபேக்டரியில் இணைப்பதற்காக முயற்சித்து வருகிறது. இதற்காக விற்பனையாளர்கள் இணைப்பு திட்டம் ஒன்றை செயல்படுத்த இருக்கிறது க்ளப் ஃபேக்டரி.

விற்பனையாளர்களுக்கு பொருட்கள் விற்பது, சலுகைகள் வழங்குவது போன்ற பயிற்சிகளை வழங்க திட்டமிட்டுள்ளனர். மேலும் மற்ற ஆன்லைன் தளங்களில் பொருட்கள் விற்பவர்களை விட 20% அதிக லாபத்தை விற்பனையாளர்களுக்கு கொடுக்க இருக்கிறது. இதனால் விற்பனையாளர்கள் நிறைய பேர் க்ளப் ஃபேக்டரியில் இணைய ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்டு மாதத்தில் நடைபெற இருக்கும் விற்பனையாளர்கள் சேர்ப்பு சந்திப்பில் அழகு பொருட்கள், தொழில்நுட்ப சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் விற்பனையாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments