அவசர இடைக்கால நிவாரணம் கோரும் ஏர்செல்: காரணம் என்ன?

Webdunia
செவ்வாய், 6 மார்ச் 2018 (14:09 IST)
ஏர்செல் நிறுவனம் திவாலனாதாக அறிவிக்க கோரி தேசிய தீர்ப்பாயத்தில் மனு அளித்துள்ள நிலையில், உடனடியாக இந்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. 
 
தமிழகத்தில் சிவசங்கரன் என்பவரால் கடந்த 1999 ஆம் ஆண்டு ஏர்செல் நிறுவனம் தொடங்கப்பட்டது. 8.5 கோடி வாடிக்கையாளர்களுடன் 6 வது இடத்தில் இருந்த ஏர்செல் தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்ட அதிக போட்டி காரணமாக நிதி நெருக்கடி ஏற்பட்டு திவால் நிலைக்கு வந்துள்ளது. 
 
ஏறக்குறைய ஏர்செல் நிறுவனத்துக்கு ரூ.50,000 கோடி கடன் நிலுவையில் இருக்கிறது. இதில் ரூ.15,000 கோடி நிதி நிறுவனங்களுக்கும், ரூ.35,000 கோடி சிக்னல் டவர் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு நிலுவையாக இருக்கிறதாம். 
 
தற்போது ஏற்கனவே அளிக்கப்பட்ட மனுவை விரைவில் விசாரிக்குமாறு ஏர்செல் கேட்டுக்கொண்டுள்ளது. அதே போல், சுமார் 6,000 ஊழியர்களுக்கு 6 மாத சம்பள பாக்கி இருப்பதாலும், மின் கட்டணம், தண்ணீர் கட்டணம் ஆகியவற்றை முடித்து வைக்க வேண்டும் என்பதற்காகவும் அவரச இடைக்கால நிவாரண தொகையை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காத்திருந்து.. காத்திருந்து.. புதினை சந்திக்க முடியாமல் பொறுமையிழந்த பாகிஸ்தான் பிரதமர்!...

இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

உச்சம் சென்ற வெள்ளி விலையில் திடீர் சரிவு.. தங்கத்தின் நிலவரம் என்ன?

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? டிசம்பர் 24-ல் அறிவிப்பு: ஓபிஎஸ் தகவல்; பாஜக சமரசம் எடுபடவில்லையா?

கேரள நடிகை பாலியல் வழக்கு: 6 குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு.. எத்தனை ஆண்டு சிறை?

அடுத்த கட்டுரையில்
Show comments