Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவசர இடைக்கால நிவாரணம் கோரும் ஏர்செல்: காரணம் என்ன?

Webdunia
செவ்வாய், 6 மார்ச் 2018 (14:09 IST)
ஏர்செல் நிறுவனம் திவாலனாதாக அறிவிக்க கோரி தேசிய தீர்ப்பாயத்தில் மனு அளித்துள்ள நிலையில், உடனடியாக இந்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. 
 
தமிழகத்தில் சிவசங்கரன் என்பவரால் கடந்த 1999 ஆம் ஆண்டு ஏர்செல் நிறுவனம் தொடங்கப்பட்டது. 8.5 கோடி வாடிக்கையாளர்களுடன் 6 வது இடத்தில் இருந்த ஏர்செல் தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்ட அதிக போட்டி காரணமாக நிதி நெருக்கடி ஏற்பட்டு திவால் நிலைக்கு வந்துள்ளது. 
 
ஏறக்குறைய ஏர்செல் நிறுவனத்துக்கு ரூ.50,000 கோடி கடன் நிலுவையில் இருக்கிறது. இதில் ரூ.15,000 கோடி நிதி நிறுவனங்களுக்கும், ரூ.35,000 கோடி சிக்னல் டவர் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு நிலுவையாக இருக்கிறதாம். 
 
தற்போது ஏற்கனவே அளிக்கப்பட்ட மனுவை விரைவில் விசாரிக்குமாறு ஏர்செல் கேட்டுக்கொண்டுள்ளது. அதே போல், சுமார் 6,000 ஊழியர்களுக்கு 6 மாத சம்பள பாக்கி இருப்பதாலும், மின் கட்டணம், தண்ணீர் கட்டணம் ஆகியவற்றை முடித்து வைக்க வேண்டும் என்பதற்காகவும் அவரச இடைக்கால நிவாரண தொகையை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல்..! நாளை தீவிர புயலாக வலுவடையும்..!!

ஜெயக்குமார் மரண வழக்கு.! சிபிசிஐடி விசாரணை தீவிரம்.! குடும்பத்தாரிடம் 6 மணி நேரம் விசாரணை..!!

புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு..! தமிழக அரசு உத்தரவு..!!

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!

அடுத்த கட்டுரையில்
Show comments