Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிங்பிஷர் போல் ஏர் இந்தியா மாறாது; விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் நம்பிக்கை

Webdunia
சனி, 30 டிசம்பர் 2017 (17:25 IST)
கிங்பிஷர் நிறுவனம் போல் செயல்படாத நிறுவனமாக ஏர் இந்தியா மாறாது என விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் காபதி ராஜூ தெரிவித்துள்ளார்.

 
கிங்பிஷர் நிறுவனம் போல் ஏர் இந்தியா நிறுவனத்தை செயல்படாத நிறுவனமாக மாற்றும் திட்டம் அரசுக்கு இல்லை விமான போக்குவரத்து துறை அமைச்சர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்கு விலக்கல் நடவடிக்கை தொடங்கப்பட்டிருந்தது. நாட்டின் போக்குவரத்து சேவைக்காக தொடங்கப்பட்ட நிறுவனம். இது கிங்பிஷர் பாதைக்கு செல்லாது. தொடர்ந்து செயல்படும். ஏர் இந்தியா நிறுவனத்தின் பணியாளர்கள் யாருக்கும் வேலை இழப்பு ஏற்படாது என்று கூறியுள்ளார்.
 
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள நிலைதான் கிங்பிஷர் நிறுவனத்தும் ஏற்பட்டது. கடன் பிரச்சனையால் கிங்பிஷர் நிறுவனம் 2012ஆம் ஆண்டு முதல் செயல்படாமல் போனது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

வார இறுதி மட்டும் முகூர்த்த நாள்: சென்னையில் இருந்து 1000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள்..!

வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்கும் சென்னை மக்கள்.. நல்ல செய்தி சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்..!

மக்களவை தேர்தலுக்கான கடைசி கட்ட தேர்தல் பிரசாரம் இன்று நிறைவு.. தலைவர்கள் சுறுசுறுப்பு..!

டிடிஎப் வாசன் மீண்டும் கைது.. மதுரை போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை..!

ஆசிரியைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்..! பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு.!

அடுத்த கட்டுரையில்
Show comments