செயல்படாத பிஎப் கணக்குகளுக்கு 8.8% வட்டி!!

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2016 (13:55 IST)
தொழிலாளர்களின் பிஎப் கணக்கில் 36 மாதங்கள் தொகை எதுவும் டெபாசிட் செய்யப்படாமல் இருந்தால் அது செயல்படாத கணக்காக முடிவு செய்யப்படுகிறது. 


 
 
இவ்வாறு அறிவிக்கப்படும் செயல்படாத கணக்கிற்கு 8.8 சதவீத வட்டி வழங்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது. இதுகுறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா அறிவித்தார். 
 
செயல்படாத பிஎப் கணக்குகளுக்கு 2011ம் ஆண்டு முதல் இதுவரை வட்டி எதுவும் வழங்கப்படாமல் உள்ளது. பிரதமர் நரேந்திரமோடி மற்றும் நிதியமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோர் கேட்டுக்கொண்டபடி, இந்த கணக்குகளுக்கு வட்டி வழங்குவதன் மூலம் அவற்றை செயல்படும் கணக்காக மாற்ற முடிவு செய்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.
 
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இதன்பிறகு சுமார் 9.7 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என பண்டாரு தத்தாத்ரேயா கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அண்ணாமலை கம்முனு இருக்கணும்.. தலைவருக்கு தெரியும்!.. தவெக பதிலடி!...

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

10 லட்சத்தில் தொழில்.. 2 லட்சம் கடன்!.. விண்ணப்பிப்பது எப்படி?...

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments