Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்தியப் பிரதேசம் செல்லும் மணிரத்னம்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (23:03 IST)
தமிழிலிருந்து தன்னுடைய கவனத்தை இந்திக்கு முற்றிலுமாக திருப்பிவிட்டார், இயக்குனர் மணிரத்னம். இவரது முந்தையப் படம் குரு, இந்தியில் தயாராகி தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

தற்போது தயாராகிவரும் ராவணன் (தமிழ்ப் பெயர் இன்னும் முடிவாகவில்லை) இந்தி, தமிழ் இரு மொழிகளில் தயாரானாலும், முக்கியத்துவம் இந்திக்குதான் என்கிறார்கள். காரணம் படத்தின் பட்ஜெட்.

ராவணனுக்குப் பிறகு மணிரத்னம் அனேகமாக ரன்பீர் கபூர் நடிக்கும் படத்தை இயக்கலாம் என்கின்றன தகவல்கள். ரன்பீர் பிரபல நடிகர் ர ி‌ ஷ‌ி கபூரின் மகன்.

அறிமுக படமான சாவரியா சரியாகப் போகாவிடினும் ரன்பீருக்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. சமீபத்தில் மணிரத்னம் ரன்பீரை சந்தித்துப் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் ராவணன் படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த மணிரத்னம் ஜனவரியில் மத்தியப் பிரதேசம் செல்கிறார். அங்குள்ள குக்கிராமம் ஒன்றில் அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யா ராய், விக்ரம் நடிக்கும் காட்சிகளை எடுக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

Show comments