காத்துக்கிடக்கும் குடும்பத்தார்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:55 IST)
பத்து இயக்குனர்கள் முதல் முறையாக நடிக்கும் படம் என்று விளம்பரப் படுத்தப்பட்ட படம் 'மாயாண்டி குடும்பத்தார்'. ஏவி.எம்.-ல் பிரமாண்டமாக பூஜை போடப்பட்டு ஷூட்டிங்கும் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் மீண்டும் விடுதலைப் புலிகளை ஆதரித்ததற்காக இயக்குனர் சீமானை கைது செய்தது போலீஸ்.

ஏற்கனவே ராமேஸ்வரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் இதே பிரச்சனை எழ, சீமான், அமீர் இருவரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்கள். அந்த வழக்கே முடியாதபோது மீண்டும் சீமான் கைது செய்யப்பட்டதால் மாயாண்டி குடும்பத்தார் மேற்கொண்டு படத்தை தொடர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பூமகள் ஊர்வலம், பாண்டி ஆகிய படங்களை இயக்கிய கருப்பையா என்கிற மதுரவன், ராசுமதுரவனாகி இயக்கிக் கொண்டிருக்கிறார். சீமானை படத்திலிருந்து ‌நீக்கிவிட்டு படத்தை தொடங்கலாம் என்று சொன்னதற்கு மதுரவன் மறுத்துவிட்டாராம். காரணம் சீமானும், மதுரவனும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் சீமான் நடிக்க வரும் வரை காத்துக் கொண்டிருப்பதாக கூறி வருகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் அத மன்னிக்கவே மாட்டேன்! திவ்யா குறித்து அணுகுண்டாக வெடித்த பார்வதி

ஸ்கிரிப்ட் செலக்‌ஷனா இதான்.. குறி வச்சு தூக்கிய சிவகார்த்திகேயன்

ஒரு தயாரிப்பாளரும் கிடைக்கலயே!.. விஜய் இருந்தவரைதான் அஜித்துக்கு மவுசா?!..

ரேஸுக்கு போறதுக்கு முன்னாடி இதத்தான் செய்வேன்!.. அஜித்தின் செண்டிமெண்ட்!..

பிப்ரவரி 14 காதலர் தினத்தில் தனுஷ் - மிருணாள் தாக்கூர் திருமணமா? பரபரப்பு தகவல்..!

Show comments