Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர்யாவுக்கு காத்திருக்கும் இயக்குனர்!

ஆர்யாவுக்கு காத்திருக்கும் இயக்குனர்!
, சனி, 26 ஏப்ரல் 2008 (17:23 IST)
ஜீவனை வைத்து 'மச்சக்காரன்'. தற்போது எஸ்.ஜே. சூர்யாவை வைத்து தயாரித்து வரும் மெட்ராஸ் எண்டர்டைமென்ஷன் 'நீயூட்டனின் 3-ம் விதி'.

இதற்கு முன் இதே நிறுவனம் 'விஷ்ணு டாக்கீஸ்' என்ற பெயரில் 'கலாபக் காதலன்' படத்தை தயாரித்தது. இதன் இயக்குனர் இகோர். பல்வேறு இயக்குனர்களிடம் பணியாற்றி பின் இந்தப் படத்தை இயக்கினார்.

இப்படம் மூலம் ஆர்யாவுக்கும் இகோருக்கும் நல்ல நட்பு மலர்ந்தது. 'கலாபக் காதலன்' சரியாக ஓடாவிட்டாலும் இகோர் மீது மதிப்பு வைத்திருந்தார் ஆர்யா. நான் கடவுள் படத்தில் ஒப்பந்தம் ஆகாததற்கு முன்பிருந்தே ஆர்யாவுக்காக காத்திருந்தார் இகோர். இதற்கிடையே நான் கடவுள் படம் கிடைக்க, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் படம் முடிந்தபாடில்லை.

ஆர்யாவை வைத்து படம் எடுக்க வந்த முனீஸ்வரன், நான் கடவுள் முடித்து ஆர்யா வருவதற்குள் இருக்கும் இடைவெளியில் ஒரு பட்ஜெட் படத்தை எடுக்கலாம் என்று இகோரிடம் சொல்ல, அப்படி எடுக்கப்பட்ட படம்தான் 'திக்... திக்'. இயக்குனர் பாக்யராஜின் பெண்தான் ஹீரோயின்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இகோர் காத்திருந்தும், விஷ்ணுவர்த்தனின் படம் முடிந்ததும் கால்ஷீட் தருகிறேன் என்று ஆர்யா சொல்ல, பொறுமையில்லாத இகோர் வேறு ஹீரோக்களுக்கு கதை சொல்ல கிளம்பிவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil