Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எஸ்.ஏ.சி. இயக்கத்தில் நித்தின் சத்யா!

எஸ்.ஏ.சி. இயக்கத்தில் நித்தின் சத்யா!
, செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (18:23 IST)
விஜய் வெற்றிகரமான நடிகரான பிறகு, அவருக்கு வழிவிட்டு இயக்குனர் வேலையை தற்காலிகமாக ஒத்திப்போட்டார் எஸ்.ஏ. சந்திரசேகரன். ஆசை அணை கடக்கும்போது, சுக்ரன், நெஞ்சிருக்கும் வரை என அவ்வப்போது ஒரு படம் இயக்குவார்.

நெஞ்சிருக்கும் வரை வெளியாகி இரண்டாண்டுகள் ஆகிறது. ஓய்வு போதும் என்று நினைத்தாரோ, புதிய படவேலையில் இறங்கியிருக்கிறார்.

லாரன்ஸ் எஸ்.ஏ.சி. இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிப்பதாகச் சொல்லப்பட்டது. இப்போது அவருக்கு பதில் நித்தின் சத்யா நடிக்கிறார்.

நான்கு ஹீரோக்களுடன் நடித்து வந்த நித்தின் சோலோ ஹீரோவாக நடிக்கும் படம் இது. அந்த வகையில் அவருக்கு இது முக்கியமான படம். 16 ஆம் தேதி படத்தை பூஜையுடன் தொடங்குகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil