பல மாவட்டங்களில் கனமழை! பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

Prasanth Karthick
திங்கள், 8 ஜனவரி 2024 (08:55 IST)
இன்று தமிழ்நாட்டின் பல பகுதிகள் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.



தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது. மிக்ஜாம் புயல் மற்றும் அதை தொடர்ந்த தென் மாவட்ட அதி கனமழைக்கு பிறகு பெரும்பாலும் குறைவான அளவே மழை பெய்து வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இன்று வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், புதுச்சேரி என பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த அனைத்து தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லிம் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யலாம்! சவுதி அரேபியாவில் முதல் முறையாக அனுமதி..!

காருக்குள் திருமணமான தம்பதிகள் அந்தரங்கம்.. சிசிடிவி வீடியோ காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது..!

1 லட்ச ரூபாய் கொடுத்தால் முஸ்லீம்கள் எனக்கு வாக்களிக்க மாட்டார்கள்: அசாம் முதல்வர்

கள்ள ஓட்டினால் வெற்றி பெற்ற கட்சிகள் தான் SIRஐ எதிர்க்கின்றன: வானதி சீனிவாசன்

ரூ.1800 கோடி அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு வாங்கிய அஜித் பவார் மகன் விவகாரம்.. அரசின் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments