Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“சாம்பியன் திரும்பி வருவான்…” ரிஷப் பண்ட்டை சந்தித்த யுவ்ராஜ் ட்வீட்!

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2023 (10:09 IST)
சில மாதங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் முன்னர் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தார் ரிஷப் பண்ட். இதையடுத்து அவர் மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மெல்ல மெல்ல அவர் குணமாகி வருகிறார்.

அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்னர் நடக்க ஆரம்பித்த அவர், இப்போது அடுத்த கட்ட முன்னேற்றத்துக்கு சென்றுள்ளார். நீச்சல் குளத்தில் கைத்தடி உதவியோடு நடக்க ஆரம்பித்துள்ளார். அவர் வேகமாக உடல்நலம் பெற்றாலும், கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இன்னும் ஒரு ஆண்டாவது ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது ரிஷப் பண்ட்டை சந்தித்துள்ள முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங், அவரோடு எடுத்துக்கொண்ட புகைபப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் ரிஷப் பண்ட் பற்றி “என்ன ஒரு நேர்மறையான வீரர்.  சாம்பியன் மீண்டும் திரும்பி வருவார். உங்களுக்கு மீண்டும் அதிக சக்தி கிடைக்கட்டும்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

நிக்கோலஸ் பூரன் பேயாட்டம்… மும்பை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த லக்னோ!

MIvsLSG: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments