Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்றைய போட்டியில் களமிறக்கப்படுவாரா அஸ்வின்?

இன்றைய போட்டியில் களமிறக்கப்படுவாரா அஸ்வின்?
, ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (09:03 IST)
இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளையும் வென்றுள்ளது. இந்நிலையில் இன்று லக்னோவில் நடக்க உள்ள போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இன்றைய போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் அணியில் ரவிசந்திரன் அஸ்வின் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் லக்னோ மைதானம் சுழல்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும். அதனால் அஸ்வினோடு ஜடேஜா கூட்டணியும் சேர்ந்தால் அணிக்கு பலமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

ஆனால் அஸ்வினை அணியில் எடுத்தால் சூர்யகுமார் யாதவ் அல்லது முகமது ஷமி ஆகியோரில் ஒருவரை பென்ச்சில் உட்காரவைக்க வேண்டும். அதனால் அஸ்வினைக் களமிறக்கும் முடிவை கேப்டன் ரோஹித்தும் பயிற்சியாளர் டிராவிட்டும் எடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாழ்வா சாவா போட்டியில் இன்று இந்தியாவை எதிர்கொள்ளும் இங்கிலாந்து!