20 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் அணியில் அஸ்வின் ஏன்? கேப்டன் ரோஹித் ஷர்மா பதில்!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (07:49 IST)
ஆசியக் கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார் அக்ஸர் படேல். அவர் உலகக் கோப்பைக்குள் குணமாகாவிட்டால் அவருக்கு பதிலாக அஸ்வின் அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகியவரில் ஒருவர் தேர்வாக வாய்ப்புள்ளதாக கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அஸ்வினுக்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடி நீண்ட இடைவெளி விழுந்துவிட்டதால், இப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அவருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

இது சம்மந்தமாக பேசியுள்ள ரோஹித் ஷர்மா “அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வருகிறார். அந்த அனுபவம் அவருக்கு ஒருநாள் போட்டிகளில் உதவும். அவரிடம் ஒருநாள் போட்டிகளில் பந்துவீசும் திறன் உள்ளது. அதனால்தான் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.  உலகக் கோப்பை தொடரில் குல்தீப் யாதவுக்கு பக்கபலமாக இருக்க மூத்த பவுலரான அஸ்வின் சரியான தேர்வாக இருப்பார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுப்மன் கில்லுக்கு ஏன் துணை கேப்டன் பதவி.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்தானதற்கு பெண் நடன இயக்குநர் காரணமா? தீயாய் பரவும் வதந்தி..!

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் வினேஷ் போகத் : 2028 ஒலிம்பிக்ஸில் மீண்டும் களம் காண்கிறாரா?

8 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள்.. 85 பந்துகளில் 163 ரன்கள்.. U19 ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவம்சி விளாசல்..!

காம்பீர் செய்த மிகப்பெரிய தவறு.. சூர்யகுமார் யாதவ் பேட்டிங் வரிசை குறித்து விமர்சனம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments