ஏன் இந்த தொடருக்கு ஆஷஸ்ன்னு பெயர் தெரியுமா? - சுவாரஸ்யமான கிரிக்கெட் வரலாறு!

Webdunia
வியாழன், 15 ஜூன் 2023 (14:29 IST)
எப்படி இப்போது இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை இரு நாட்டு ரசிகர்களும் ஒரு வெறியோடு பார்க்கிறார்களோ அதுபோல இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாட்டு ரசிகர்கள் வெறியோடு பார்க்கும் ஒரு தொடர்தான் ஆஷஸ்.

இந்த ஆஷஸ் தொடர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் மாறி மாறி ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நாளை தொடங்க உள்ளது. இந்த தொடருக்கு ஆஷஸ் என பெயர் வர ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது.

1882 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணி ஓவலில் நடைபெற்ற தொடரில் இங்கிலாந்தை வென்றது. அதனை ஆங்கிலேயே ஊடகங்கள் “இங்கிலாந்து கிரிக்கெட் மரணமடைந்துவிட்டது. அதன் உடல் எரிக்கப்பட்டு, அதன் சாம்பல் ஆஸ்திரேலியாவுக்கு எடுத்து செல்லப்படுகிறது” எனக் கடுமையாக விமர்சித்து எழுதினார்கள்.

இதனால் அவமானப்பட்ட இங்கிலாந்து அணி அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சென்று டெஸ்ட் தொடரை வென்றது. அப்போது அணியின் கேப்டன் ஐவோ பிளிக் “இங்கிலாந்து கிரிக்கெட்டின் சாம்பலை மீண்டும் இங்கிலாந்துக்கே கொண்டு வருகிறோம்” எனக் கூறி பெருமிதப்பட்டார். இங்கிலாந்து திரும்பிய அணிக்கு சாம்பல் நிறைந்த ஒரு பெட்டகத்தை சில பெண்கள் பரிசாக அளிக்க அன்றிலிருந்து சாம்பலை குறிக்கும் ஆஷஸ் என்ற வார்த்தை பயன்படுத்தப் படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஐபிஎல் சீசனில் 300 ரன்கள் நிச்சயம் உண்டு.. ரவிச்சந்திரன் அஸ்வின் கணிப்பு..!

ஐபிஎல் தொடரில் தோனி விளையாட மாட்டார்.. சிஎஸ்கே அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

45 வயதில் தோனி என்னத்தை சாதிக்க போகிறார்? ஐபிஎல் தொடரில் நீடிப்பது குறித்து ஆகாஷ் சோப்ரா கமெண்ட்..!

நாங்கள் எல்லாம் விஐபி.. எங்களுக்கு ஐபிஎல் பார்க்க விஐபி ஓசி டிக்கெட் வேண்டும்: எம்.எல்.ஏக்கள் கோரிக்கை..!

இனிமேல் வைபவ் சூர்யவன்ஷி 14 வயது சிறுவன் அல்ல.. இந்திய அணியில் இடம் பிடிக்க தகுதி பெற்றுவிட்டார்...!

அடுத்த கட்டுரையில்
Show comments