Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு ஏன் வலிக்க வேண்டும்?... சாம்பியன்ஸ் கோப்பை அணியில் இடம் பெறாதது குறித்து சூர்யகுமார்!

vinoth
புதன், 22 ஜனவரி 2025 (07:19 IST)
பிப்ரவரி 19ம் தேதி பாகிஸ்தானின் கராச்சியில் சாம்பியன்ஸ் ட்ராஃபி போட்டிகள் தொடங்கி, பாகிஸ்தான், துபாய் என இரண்டு நாடுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ஷுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த தொடரில் இந்திய அணியின் டி 20 கேப்டனான சூர்யகுமார் யாதவ்வுக்கும் இடம் கிடைக்கவில்லை. அவர் கடைசியாக 50 உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். ஆனால் அந்த தொடரில் அவர் சரியாக விளையாடவில்லை. அதனால் அதன் பிறகு அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இதுபற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சூர்யகுமார் “எனக்கு ஏன் அது வலிக்க வேண்டும்? நான் சரியாக விளையாடி இருந்தால் எனக்கு இடம் கிடைத்திருக்கும். அப்படி இல்லாத பட்சத்தில்  அணிக்கு தகுதியான ஒருவருக்குதான் இடம் கிடைக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலிக்கு வெள்ளித்தட்டு கொடுத்த கௌரவித்த டெல்லி கிரிக்கெட் வாரியம்!

துபேவுக்கு பதில் ராணாவா?... அதிருப்தியை பதிவு செய்த இங்கிலாந்து கேப்டன் பட்லர்!

ஹர்திக் பாண்ட்யா தன்னுடைய அனுபவத்தை சிறப்பாகப் பயன்படுத்தினார்… கேப்டன் பாராட்டு!

ஷிவம் துபேக்கு பதில் கன்கஷன் சப்ஸ்ட்டியூட்டாக வந்த ஹர்ஷித் ராணா.. இதெல்லாம் நியாயமா?

நான்காவது போட்டியை வென்று தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments