மிடில் ஓவர்களில் அட்டாக் செய்து விளையாடுவதுதான் என் ஸ்டைல்… ஆட்டநாயகன் சூர்யகுமார்!

vinoth
வெள்ளி, 21 ஜூன் 2024 (10:42 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் நேற்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.

சூரியகுமார் யாதவ் அபாரமாக விளையாடி 53 ரன்களும் ஹர்திக் பாண்டியா 32 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து 182 என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய நிலையில் அந்த அணி 20 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.. இதனை அடுத்து இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதும் சூப்பர் 8 தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் சிறப்பாக பேட் செய்த சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது பேசிய அவர் “இந்த இன்னிங்ஸுக்கு பின்னால் நிறைய உழைப்பு உள்ளது. திட்டத்தைக் களத்தில் செயல்படுத்தும் விதமாக நம்முடைய ஆட்டம் இருக்க வேண்டும். ஹர்திக் விளையாட வரும்போது எந்த மாற்றமும் இல்லாமல் அட்டாக் செய்தே விளையாடுவோம் எனக் கூறினேன். பந்து கொஞ்சம் பழையதாக மாறி ரிவர்ஸ் ஆனது. அதனால் 16 ஓவர்கள் வரை அடித்தாடி அதன் பின்னர் இறுதி ஓவர்களில் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்தேன். எனக்கு அளித்த இந்த விருதை பவுலர்களுக்கு அளித்திருந்தாலும் சரியான முடிவாகவே கருதுவேன். பவுலர்கள் 7 முதல் 15 ஓவர்களில் அடித்தாட நினைப்பார்கள். அப்போது அட்டாக் செய்து விளையாடியது மகிழ்ச்சி.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் வந்தால் கொல்வோம்: டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித்துக்கு மிரட்டல் விடுத்த வன்முறை இயக்கம்..!

வைபவ் சூர்யவன்ஷி சொல் பேச்சை கேட்க மாட்டார்.. அவர் இன்னும் சிறுவர் தான்: ஆர்சிபி வீரர் கிண்டல்..!

தோனி 60 வயது வரை சிஎஸ்கேவுக்காக விளையாட வேண்டும்.. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்.. தல பதில் என்ன தெரியுமா?

விக்கெட் கீப்பர் தோனி.. பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன்.. பவுலர் முரளிதரன்.. களைகட்டிய சேப்பாக்கம் பயிற்சி போட்டி..!

கேப்டனையே வெளியே போக சொன்ன சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர்.. அணிக்குள் பிரச்சனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments