Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூப்பர் 8 போட்டியில் இந்தியாவுக்கு முதல் வெற்றி.. சூர்யகுமார் யாதவ் அபாரம்..!

சூப்பர் 8 போட்டியில் இந்தியாவுக்கு முதல் வெற்றி.. சூர்யகுமார் யாதவ் அபாரம்..!

Siva

, வெள்ளி, 21 ஜூன் 2024 (07:45 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தொடரில் தற்போது சூப்பர் 8 போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் நேற்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.
 
சூரியகுமார் யாதவ் அபாரமாக விளையாடி 53 ரன்களும் ஹர்திக் பாண்டியா 32 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து 182 என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய நிலையில் அந்த அணி 20 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.. இதனை அடுத்து இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதும் சூப்பர் 8 தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
நேற்றைய போட்டியில் அர்ஷ்தீப் சிங் மற்றும் பும்ரா ஆகிய இருவரும் அபாரமாக பந்துவீசி தலா மூன்று விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், வீழ்த்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
 
இந்த நிலையில் இன்று வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான சூப்பர் ஹிட் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளிநாட்டு வீரரை தன் பயிற்சியாளர் குழுவுக்குள் இணைக்க ஆசைப்படும் கம்பீர்!