Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“சூர்யகுமார் யாதவ்வை வீணாக்காதீர்கள்…” ரோஹித் ஷர்மாவை விளாசும் முன்னாள் வீரர்!

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (09:24 IST)
கடந்த சில போட்டிகளாக சூர்யகுமார் யாதவ் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுகிறார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி 20 தொடருக்காக வெஸ்ட் இண்டீஸில் முகாமிட்டுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த இரு போட்டிகளிலும் புதுமுயற்சியாக சூர்யகுமார் யாதவ் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார். ஆனால் அவர் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் கேப்டன் ரோஹித் ஷர்மாவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அதில் “சூர்யகுமார் யாதவ்வின் திறமையை வீணாக்காதீர்கள் ரோஹித் ஷர்மா. அவர் நான்காவது இடத்தில் சிறப்பாக விளையாடுகிறார். உலகக்கோப்பையில் அந்த இடத்தில்தான் விளையாடவேண்டும். இப்படி செய்து அவரின் தன்னம்பிக்கையை குலைத்து விடாதீர்கள். உங்களுக்கு தொடக்க ஆட்டக்காரர் வேண்டும் என்றால் ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் இருந்து நீக்கி, இஷான் கிஷானை எடுத்துக்கொள்ளுங்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சூப்பர்-8 சுற்றுக்கு வங்கதேசம் தகுதி...! நேபாளம் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி..!!

சூப்பர் 8 போட்டி அட்டவணை வெளியீடு! இந்தியாவுடன் மோதும் அணிகள் எவை?

ஜெய்ஸ்வால் உள்ளே வந்தால் பேட்டிங் வரிசை குழம்பிவிடும்… முன்னாள் வீரர் கருத்து!

கேப்டன்சியை ஏற்காமல் ஷாகீன் அப்ரிடிக்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டும்- பாபர் ஆசாம் குறித்து ஷாகித் அப்ரிடி விமர்சனம்!

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments