Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் ஒருவருக்கு கொரோனா… இருவர் தனிமைப்படுத்தல் – அதிர்ச்சி தகவல்!

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (11:12 IST)
இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இங்கிலாந்து அணி இம்மாத இறுதியில் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று 3 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அதற்காக வீர்ரகளுக்கு இடையேயான பயோ பபுள் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரு வீரருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த வீரரும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இரு வீரர்களும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இதை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமே அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா பாதித்த வீரர் யார் என்றும் தனிமைப்படுத்தப்பட்ட 3 வீரர்கள் யார் என்பதையும் அறிவிக்க மறுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்னும் அமெரிக்கா செல்லாத கோலி… வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் விளையாடுவாரா?

ஐபிஎல் வர்ணனையின் போது ராயுடுவை ‘ஜோக்கர்’ என கேலி செய்த பீட்டர்சன்.. ஓ இதுதான் காரணமா?

ஸ்ரேயாஸ்தான் இந்திய அணியின் எதிர்கால கேப்டனா?... சமூகவலைதளங்களில் ரசிகர்கள் விவாதம்!

நடிகைகளின் ஹாட் வீடியோ.. யுட்யூப் ஹிஸ்டரியைக் காட்டி சர்ச்சையில் சிக்கிய ரியான் பராக்!

குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம்… இந்திய அணியோடு அமெரிக்கா செல்லாமல் ஒதுங்கிய ஹர்திக் பாண்ட்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments