Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

23 பந்துகளில் அரைசதம்… தனது சாதனையை தானே முறியடித்த இந்திய வீராங்கனை

23 பந்துகளில் அரைசதம்… தனது சாதனையை தானே முறியடித்த இந்திய வீராங்கனை
, ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (09:10 IST)
காமன்வெல்த் போட்டித் தொடரில் நேற்றைய போட்டியில் இங்கிலாந்தை வென்றதன் மூலம் இந்திய அணி அரை இறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளது.

காமன்வெல்த் போட்டிகள் தற்பொழுது இங்கிலாந்தில் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் மகளிருக்கான டி 20 கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

நேற்று நடந்த கால் இறுதி போட்டியில் இங்கிலாந்தை நான்கு ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 23 பந்துகளில் அரைசதம் அடித்து புதிய சாதனையை படைத்தார்.

இதன் மூலம் டி 20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற அவரின் முந்தைய சாதனையை அவரே தகர்த்துள்ளார். இதற்கு முன்பு 24 பந்துகளில் அவர் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“எலோருக்கும் ஒன்றிரண்டு மோசமான போட்டிகள் வரும்…” ஆட்டநாயகன் குறித்து கேப்டன் கருத்து