தேசங்களை இணைப்பதுதான் விளையாட்டு… இந்திய அணியின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த ஷாகித் அப்ரிடி!

vinoth
திங்கள், 21 ஜூலை 2025 (14:28 IST)
கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலை அடுத்து இந்திய முப்படை பாகிஸ்தானின் 9 இடங்களில் குறிவைத்துத் தாக்கியது. தீவிரவாதிகள் முகாமைதான் தாக்கினோம் என்று இந்தியா சார்பில் சொல்லப்பட்டாலும், மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகள் தாக்குதல் நடத்தியதாகக் குற்றச்சாட்டை வைத்தது.

இதையடுத்து இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் நடந்த அடுத்தடுத்த தாக்குதல்களால் பதற்றமான சூழல் உருவானது. அதன் பின்னர் போர் நிறுத்தத்தை ஏற்று இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்தின.

இந்நிலையில் தற்போது நடந்து வரும் உலக சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் இந்த தாக்குதலைக் கண்டிக்கும் விதமாக இந்திய சாம்பியன்ஸ் அணி பாகிஸ்தான் அணியோடு விளையாட மறுத்தது. இது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி “விளையாட்டு என்பதே தேசங்களை இணைக்கதான். அதிலும் அரசியலை நுழைத்தால் எப்படி முன்னேற்றம் அடைய முடியும்? உரையாடல் இல்லாவிட்டால் எப்படி தீர்வு கிடைக்கும்? ஒரே ஒரு அழுகிய முட்டை எல்லாவற்றையும் வீணாக்கிவிடும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா சம்பளம் ரூ.2 கோடி குறைக்கப்படுகிறதா? பிசிசிஐ முடிவுக்கு என்ன காரணம்?

நடுவரை விரட்டி விரட்டி அடித்த வீரர்கள்.. கலவர பூமியான பாகிஸ்தான் மைதானம்..

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments