Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்க தொடர்: இந்திய வீரர்களுக்கு சேவாக் ஆலோசனை!

Webdunia
வியாழன், 11 ஜனவரி 2018 (18:24 IST)
தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் போட்டி, இருபது ஓவர் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.
 
72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிடிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி எப்படி விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
 
தொலைக்காட்சி ஒன்றில் இதுகுறித்து பேசிய சேவாக், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியில் செல்லும் பந்துகளைத் தொடாமல் இருக்க வேண்டும், ஸ்ட்ரெய்டாக ஆட முயற்சிக்க வேண்டும். மேலும் அதிரடியாக விளையாட ஸ்ட்ரெய்ட் மற்றும் பிளிக் ஷாட்களையே தேர்வு செய்ய வேண்டும். ஷார்ட் பிச் பந்துகள் ஆக்ரோஷமாக வரும், அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
 
தென்னாப்பிரிக்க பிட்சுகளில் பந்துகள் பவுன்சராக வரும். இதனால் போல்ட் ஆவது கடினம். இதனை நேர்மறையாக எடுத்துக்கொண்டு ஒரு ஓவருக்கு குறைந்தது 3 ரன்களாவது எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments