Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லக்னோ அணியை உருவாக்கியதே கம்பீர்தான்.. சஞ்சீவ் கோயங்கா நெகிழ்ச்சி!

vinoth
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (08:00 IST)
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் அணிகளின் எண்ணிக்கை பத்தாக உயர்த்தப்பட்ட போது இணைந்த அணிகளில் ஒன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். அந்த அணியை தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்கா வாங்கினார். அந்த இரண்டு முறை ப்ளே ஆஃப்க்கு சென்று நிலை நிறுத்திக் கொண்டுள்ளது.

ஆனால் இந்த ஆண்டு மத்தியில் நடந்த ஐபிஎல் தொடரில் பல சர்ச்சையான விஷயங்கள் நடந்தன. அதில் லக்னோ அணி உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா, அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுலிடம் போட்டி முடிந்ததும் மிகவும் அநாகரிகமாகவும், ஆவேசமாகவும் பேசியதும் ஒன்று. இந்த வீடியோ வைரலாக ரசிகர்கள் “ஒரு அணித் தலைவரை உரிமையாளர் இப்படி எல்லாம் அவமானப்படுத்தக் கூடாது” எனக் கண்டனம் தெரிவித்தனர்.

இதனால்  கே எல் ராகுல் லக்னோ அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி வேறொரு அணியில் இணையப் போகிறார் என்ற கருத்துகள் எழுந்தன. ஆனால் இப்போது ராகுல் லக்னோ அணிக்கே திரும்ப கேப்டனாக இல்லாமல் ஒரு வீரராக மட்டும் விளையாட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் லக்னோ அணியை உருவாக்கியதில் கவுதம் கம்பீரின் பங்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்து சஞ்சீவ் கோயங்கா பேசியுள்ளார். அதில் “லக்னோ அணி எங்களுக்கு வழங்கப்பட்ட போது எங்களிடம் ஒரு அனலிஸ்ட் கூட இல்லை. அப்போது அணியை வடிவமைப்பதில் இருந்து அனைத்து வகையான வீரர்களையும் அணிக்குள் இணைத்தது வரை அனைத்தையும் கம்பீர்தான் செய்தார். அணி உருவாக்கத்தில் அவரின் பங்கு அளப்பரியது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஸ்வின், ஜடேஜா அபார பேட்டிங்.. முதல் நாள் முடிவில் இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அஸ்வின் சதம், ஜடேஜா அரைசதம்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபரம்..!

உங்களின் அந்த இன்னிங்ஸ்தான் இந்திய வீரர் ஒருவரின் சிறந்த இன்னிங்ஸ்… கம்பீர் புகழாரம்!

சேப்பாக்கம் டெஸ்ட்: வங்கதேசம் பந்துவீச்சு! 634 நாட்களுக்கு பின் களமிறங்கும் ரிஷப் பண்ட்!

Chess Olympiad: 7 சுற்றிலும் தொடர் வெற்றி.. தங்கத்தை நோக்கி இந்திய தங்கங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments