Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எங்கள் குடும்பத்தில் அவர் ஒருவர்… கே எல் ராகுல் குறித்து லக்னோ அணி உரிமையாளர்!

Advertiesment
RCB New Captain
இந்த ஆண்டு மத்தியில் நடந்த ஐபிஎல் தொடரில் பல சர்ச்சையான விஷயங்கள் நடந்தன. அதில் லக்னோ அணி உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா, அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுலிடம் போட்டி முடிந்ததும் மிகவும் அநாகரிகமாகவும், ஆவேசமாகவும் பேசியதும் ஒன்று. இந்த வீடியோ வைரலாக ரசிகர்கள் “ஒரு அணித் தலைவரை உரிமையாளர் இப்படி எல்லாம் அவமானப்படுத்தக் கூடாது” எனக் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில்  கே எல் ராகுல் லக்னோ அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி வேறொரு அணியில் இணையப் போகிறார் என்ற கருத்துகள் எழுந்தன. ஆனால் இப்போது திடீரென கே எல் ராகுல் சஞ்சீவ் கோயங்காவை சந்தித்துப் பேசியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ராகுல் மீண்டும் லக்னோ அணிக்காகவே விளையாட முடிவு செய்திருப்பதாக ஊகங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக அணி நிர்வாகத்திடம் சொல்லியுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் லக்னோ அணி உரிமையாளர் கோயங்கா பேசும்போது “ஒரு விஷயத்தை நான் தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன். அது என்னவென்றால் எங்கள் லக்னோ அணி குடும்பத்தில் ஒருவர் கே எல் ராகுல். ஆனால் யார் கேப்டன் என்பதை ரிடென்ஷசி பாலிசி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் சொல்லமுடியும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“ரோஹித் ஷர்மா மும்பை அணியிலேயே தொடர்வார்..” – இந்திய வீரர் கணிப்பு!