Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்… சஞ்சய் மஞ்சரேக்கர் அறிவுரை!

vinoth
திங்கள், 20 ஜனவரி 2025 (08:17 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை இழந்துள்ளது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸி மண்ணில் சிறப்பாக விளையாடக் கூடியவரான கோலி ஒரே ஒரு சதத்தை தவிர மற்ற இன்னிங்ஸ்களில் சொதப்பினார்.

கோலியைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக அவர் ஒரே மாதிரியாக தன்னுடைய விக்கெட்டை இழந்து வருகிறார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளில்தான் அவர் அதிகமுறை  கேட்ச் கொடுத்து அவுட் ஆகி  வெளியேறுகிறார். ஆனால் அந்த பந்துகளை அடிக்காமல் விட்டு கூடுதல் ரன்களை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர் முன்னாள் வீரர்கள். ஆனால் கோலி பிடிவாதமாக அந்த பந்துகளை ஆடி விக்கெட்டை இழந்து வருகிறார் என்பதுதான் சோகம்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கோலி பற்றி பேசும்போது “கோலி அதிகளவிலான டெஸ்ட் கிரிக்கெட்களில் விளையாட வேண்டும். ஏப்ரல் மாதம் இங்கிலாந்து கவுண்ட்டி சாம்பியன்ஷிப் தொடர் நடக்க உள்ளது. அதில் எதாவது ஒரு அணியில் இணைந்து கோலி விளையாடினால் அவருக்கு அது பயிற்சியாக இருக்கும்” எனக் கூறியுள்ளார். ஆனால் ஏப்ரல் மாதத்தில்தான் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடக்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவாஜா, ஸ்மித் அதிரடி சதம்.. இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அபாரம்..!

ரோஹித் இதயத்தில் இருந்து ரஞ்சி போட்டியில் விளையாடினாரா?... சுனில் கவாஸ்கர் காட்டம்!

மீண்டும் கிரிக்கெட் களத்தில் டிவில்லியர்ஸ்.. மகனின் ஆசையை நிறைவேற்ற எடுத்த முடிவு!

கோலி களமிறங்குவதால் ரஞ்சிக் கோப்பை போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்யும் ஜியோ!

டிவில்லியர்ஸ் ஐபிஎல் தொடரில் தவறான அணிகளில் விளையாடிவிட்டார்.. முன்னாள் வீரர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments