Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் எதை தவறவிட்டேன்… இந்தியா தென்னாப்பிரிக்கா போட்டி குறித்து சச்சின் ஜாலி ட்வீட்!

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2024 (09:43 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் இரு அணிகளும் விக்கெட்களை மளமளவென இழந்து தடுமாறி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து இந்திய பந்துவீச்சில் சுருண்டது.

அதையடுத்து பேட் செய்த இந்திய அணி 153 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக இந்திய வீரர் கோலி 46 ரன்கள் சேர்த்தார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த இந்திய அணி 153 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து விளையாடிக் கொண்டிருந்தது. அதன் பின்னர் மளமளவென விக்கெட்கள் இழந்து 153 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் மீண்டும் தென்னாப்பிரிக்க அணி பேட் செய்ய வந்து 62 ரன்கள் சேர்த்து 3 விக்கெட்களை இழந்தது. இப்படி ஒரே நாளில் 23 விக்கெட்கள் விழுந்தன.

இந்நிலையில் இந்த முதல் நாள் ஆட்டம் குறித்து ட்வீட் செய்துள்ள சச்சின் “நான் விமானத்தில் ஏறும் போது தென்னாப்பிரிக்கா அனைத்து விக்கெட்களையும் இழந்திருந்தது. அதன் பின்னர் நான் விமானத்தில் இருந்து இறங்கும் போது அவர்கள் 3 விக்கெட்டில் இருந்தார்கள். இடையில் நான் எதை தவறவிட்டேன் என சொல்லுங்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments