சச்சின் டெண்டுல்கருக்கு அறுவை சிகிச்சை

Webdunia
வியாழன், 7 ஜூலை 2016 (10:44 IST)
சச்சின் டெண்டுல்கர் சில காயங்களின் பிரச்சனைகளால், அவதிபட்டு வந்த நிலையில் தற்போது  தனது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.


 
கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றதை தொடர்ந்து ராஜ்யசபா எம்.பி.யாக நியமிக்கப்பட்ட சச்சின், இந்தியாவில் விளையாட்டுத் துறை மேம்படுத்துதல் உட்பட பல சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்தி வந்தார்.

இந்நிலையில், சில காயங்களின் பிரச்சனைகளால், அவதிபட்டு வந்த சச்சின்,  தனது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இதுகுறித்து சச்சின் தனது முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  “ஓய்வு பெற்ற பிறகும் சில காயங்கள் பிரச்சனைகளாக உருவெடுத்தது, ஆதலால், முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது ஒய்வு எடுத்து வருவகிறேன். மிக விரைவில் மீண்டு வந்து எனக்கு பிடித்த விஷயங்களை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1989-ம் ஆண்டு கிரிக்கெட் கிரிக்கெட்டில் கால் பதித்து பல உலக சாதனைகளை நிகழ்த்திய டெண்டுல்கர். 2013-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி கிரிக்கெட்டிலிருந்த ஒய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகக்கோப்பையை தவிர்ப்போம் என கூறிவிட்டு அணியை அறிவித்த பாகிஸ்தான்.. பூச்சாண்டி காட்டுகிறதா?

வங்கதேசத்தை நீக்கினால் உலக கோப்பை தொடரில் நாங்களும் விலகுவோம்: பாகிஸ்தான்

கோஹ்லி, ரோஹித்துக்கு ரூ.4 கோடி சம்பளம் குறைப்பா? பிசிசிஐ சொல்வது என்ன?

வங்கதேசத்தை அடுத்து பாகிஸ்தானும் புறக்கணிக்கிறதா? தாராளமா புறக்கணிச்சுக்கோ.. இந்தியாவுக்கு ஒரு நஷ்டமும் இல்லை..!

ஐசிசி உலகக்கோப்பை டி20 போட்டியில் வங்கதேசம் இல்லை: அதிரடி முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments