Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னைக்கு ஜெயிக்கலைனா சோலி முடிஞ்ச்..! – பேட்டிங் தேர்வு செய்த ஆர்சிபி!

Webdunia
ஞாயிறு, 14 மே 2023 (15:24 IST)
ஐபிஎல் லீக் போட்டிகளின் பரபரப்பான இறுதி கட்டத்தில் இன்று நண்பகல் போட்டியில் ஆர்சிபி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக் கொள்கின்றன.

ஐபிஎல் தரவரிசையில் 16 புள்ளிகள் ப்ளே ஆப் தகுதி பெற தேவைப்படும் நிலையில் 12 புள்ளிகளுடன் ராஜஸ்தான் அணி 5வது இடத்திலும், ஆர்சிபி அணி 10 புள்ளிகளுடன் 7வது இடத்திலும் உள்ளது. இரு அணிகளுமே தங்களுக்கு மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆப் தகுதி பெற முடியும் என்ற நிலை உள்ளது.

இந்நிலையில் இன்று இரு அணிக்கும் நடைபெறும் போட்டி வாழ்வா? சாவா? போட்டியாக அமைகிறது. இதில் தோல்வியடையும் அணி ப்ளே ஆப் தகுதியை இழக்கும்.

தற்போது டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங் தேர்ந்தெடுத்துள்ளது. வழக்கம்போல ஆர்சிபியின் KGF என வர்ணிக்கப்படும் கோலி, மேக்ஸ்வெல், டூ ப்ளெசிஸை நம்பியே ரன்கள் குவிப்பது உள்ளது. 200+ ரன்களை குவித்தால்தான் ராஜஸ்தான் போன்ற அணிகளை சேஸிங்கில் மடக்க முடியும்.

ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால், சஞ்சு, ஜாஸ் பட்லட், ஹெட்மயர், ஜுரெல் என பேட்டிங்கிற்கு பல நம்பிக்கை நட்சத்திரங்கள் உள்ளனர். யுவேந்திர சஹல் பந்து வீச்சில் கலக்கி வருகிறார். இந்த அணியை எதிர்கொள்வது ஆர்சிபிக்கு சவாலாகவே இருக்கும்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments