Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால்பந்து விளையாடியதால் கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த பரிதாபம்..

Arun Prasath
செவ்வாய், 7 ஜனவரி 2020 (17:47 IST)
பயிற்சியில் கால் பந்து விளையாடியபோது ஏற்பட்ட காயத்தால் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ரோர் பேர்ன்ஸ் நான்கு மாதம் கிரிக்கெட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 3 ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் தென் ஆஃப்ரிக்க அணிகளுக்கிடையே நடைபெற்ற இரண்டாவது போட்டி நடைபெற்ற நிலையில், அதற்கான வார்ம் அப் பயிற்சியில் ஈடுபட்ட போது, கிரிக்கெட் வீரர்கள் கால் பந்து விளையாடினர்.

அப்பயிற்சியின் போது இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரும் தொடக்க ஆட்டக்காருமான ரோரி ஜோசஃப் பேர்ன்ஸின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அந்த டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார். இந்நிலையில் கணுக்காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளதால், நான்கு மாதங்களுக்கு ஓய்வு தேவை எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் ரோரி பேர்ன்ஸ் இலங்கை சுற்றுப்பயணத்தை தவறவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”RCBகிட்ட கப் இல்லைன்னு யார் சொன்னது?” ண்ணோவ்.. சும்மா இருண்ணா! - படிதார் பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

ஜடேஜாவைக் கேப்டனாக்குங்கள்… இளம் வீரர் வேண்டாம் -அஸ்வின் சொல்லும் காரணம்!

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள்! ரொனால்டோ முதலிடம்! - சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா?

கோலி ஓய்வு முடிவில் தெளிவாக இருந்தார்… என் கேள்விகளுக்கு தெளிவான பதில் சொன்னார் – மனம் திறந்த ரவி சாஸ்திரி!

ரோ-கோ இல்லாததால் பதற்றம் வேண்டாம்.. சிறிதுகாலத்தில் சரியாகி விடும் –சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments