Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் விக்கெட்டை இழந்த இந்தியா… ஏமாற்றிய ராகுல் & ரோஹித் ஷர்மா!

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2023 (10:29 IST)
இந்திய அணி முதல் இன்னிங்ஸை தற்போது ஆடிவரும் நிலையில் முதல் விக்கெட்டை இழந்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.

இந்திய அணியின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறிய ஆஸி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் காவாஜா 81 மற்றும் அலெக்ஸ் ஹேரியின் 72 ரன்கள் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 263 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 21 ரன்கள் சேர்த்து நேற்றைய ஆட்டத்தை முடித்தது. இன்று தொடர்ந்து ஆடிவரும் நிலையில் முதல் விக்கெட்டாக கே எல் ராகுல் 17 ரன்களுக்கும் அடுத்த விக்கெட்டாக ரோஹித் ஷர்மா 32 ரன்களுக்கும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

யூரோ கால்பந்து போட்டி.. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜெர்மனி.. பெரும் சாதனை..!

ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து ஆடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் சேர்ப்பு… ஆஸி தோற்றால் இங்கிலாந்து வெளியே!

அடுத்த கட்டுரையில்
Show comments