Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகும் போது விராட் கோலி அதில் குறியாக இருந்தார்… பண்ட் பகிர்ந்த தகவல்!

vinoth
சனி, 20 ஜனவரி 2024 (09:51 IST)
கடந்த ஆண்டு தொடக்கத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்போது காயத்தில் இருந்து குணமாகி வரும் அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் களமிறங்குவார் என சொல்லப்படுகிறது.

தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வரும் பண்ட், அந்த அணிக்கு கேப்டனாகவும் செயல்படுகிறார். விபத்து காரணமாக கடந்த ஐபிஎல் சீசனை இழந்த ரிஷப் பண்ட் அடுத்த சீசனுக்காவது அணிக்கு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் தற்போது அளித்துள்ள ஒரு நேர்காணலில் பண்ட் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரின் அர்ப்பணிப்பு குறித்து கூறியுள்ளார். அதில் “நான் 2018 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான போது கோலியும் ரவி சாஸ்திரியும் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் வெல்ல வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார்கள்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

156 ரன்களில் ஆல் அவுட்.. மீண்டும் இந்தியா மோசமான தோல்வி! - இந்த மேட்ச்சும் அவ்ளோதானா?

7வது விக்கெட்டை இழந்த இந்தியா.. இந்திய அணியை ஜடேஜா காப்பாற்றுவாரா?

புரோ கபடி 2024: ஹரியானா, பெங்கால் அணிகள் அபார வெற்றி: புள்ளிப்பட்டியல் விபரங்கள்..!

இரண்டாவது டெஸ்ட்டும் சொதப்பல்.. 83 ரன்களுக்கு 5 விக்கெட்! தடுமாறும் இந்தியா!

வார்னருக்கு வாழ்நாள் தடை நீக்கம்! புஷ்பா back on fire! - மீண்டும் கேப்டன் ஆவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments