Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ஜெர்ஸியை அணிவது இனிமையானது… கம்பேக் குறித்து ரிஷப் பண்ட் நெகிழ்ச்சி

vinoth
சனி, 1 ஜூன் 2024 (06:18 IST)
கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்போது காயத்தில் இருந்து குணமாகியுள்ள ஐபிஎல் தொடரில் களமிறங்கி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வழிநடத்தினார்.

அவர் தலைமையில் டெல்லி அணி ப்ளே ஆஃப் செல்லவில்லை என்றாலும் அவரது பேட்டிங் சிறப்பாக இருந்தது. அவர் 400+ ரன்களை சேர்த்தார். இதன் மூலம் அவர் டி 20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச போட்டிகளில் விளையாடுவது குறித்து பேசியுள்ள ரிஷப் பண்ட் “இந்திய அணி ஜெர்ஸியை அணிவது மிகவும் இனிமையானது. இதைதான் நான் இவ்வளவு நாட்களாக இழந்ததாக உணர்கிறேன். இங்கிருந்து என் பயணம் சிறப்பாக அமையும் என நினைக்கிறேன். அணி வீரர்களுடன் இணைந்து நேரம் செலவிடுவதை மகிழ்ச்சியாக உணர்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

ஷமி வெளி உலகத்துக்காக ஷோ காட்டுகிறார்… என் மகளுக்கு அவர் வாங்கிக் கொடுத்ததெல்லாம் இலவசம்… முன்னாள் மனைவி விமர்சனம்!

தோனிக்காக விதிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்… முகமது கைஃப் கருத்து!

RCB போட்டிக்குப் பிறகு கோபத்தில் டிவியை உடைத்தாரா தோனி?.. ஹர்பஜன் சிங் சர்ச்ச்சைக் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments