Publish Date: Mon, 20 Jan 2025 (15:00 IST)
Updated Date: Mon, 20 Jan 2025 (15:02 IST)
ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக கே எல் ராகுல் லக்னோ அணியால் கழட்டிவிடப்பட்டார். கடந்த ஆண்டு ராகுலுக்கும் அணி உரிமையாளர் சஞ்சய் கோயங்காவுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்தான் இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது.
இதையடுத்து நடந்த மெஹா ஏலத்தில் லக்னோ அணி ரிஷப் பண்ட்டை 27 கோடி ரூபாய் செலவு செய்து எடுத்தது. இதுவரை ஐபிஎப் தொடரில் எந்தவொரு அணியும் இவ்வளவு தொகை செலவு செய்து ஒரு வீரரை ஏலத்தில் எடுத்ததில்லை. லக்னோ அணியில் ரிஷப் பண்ட், மார்க்ரம், பூரான் மற்றும் மிட்ஷெல் மார்ஷ் ஆகியோர் உள்ளதால் இன்னும் கேப்டன் யார் என முடிவு செய்யவில்லை என சஞ்சய் கோயங்கா சில வாரங்களுக்கு முன்பு பேசியிருந்தார்.
இந்நிலையில் இப்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதியக் கேப்டனாக ரிஷப் பண்ட்டை அவர் அறிவித்துள்ளார். தோனி மற்றும் கே எல் ராகுல் ஆகிய இருவரையும் கேப்டனாக நியமித்து பின்னர் அவர்களை அவமரியாதையாக நடத்தினார் கோயங்கா என்ற எதிர்மறையான பிம்பம் அவர் மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.