’கோவிந்தா.. கோவிந்தா..!’ திருப்பதியில் RCB கேப்டன் ரஜத் படிதார் சாமி தரிசனம்!

Prasanth Karthick
புதன், 30 ஏப்ரல் 2025 (14:18 IST)

ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி அதிரடியாக விளையாடி வரும் நிலையில் இன்று ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

 

நடப்பு ஆண்டு ஐபிஎல் சீசன் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் ஆட்டம் தனி ரகமாக இருந்து வருகிறது. கடந்த 18 ஆண்டுகளாக ஐபிஎல் விளையாடி வரும் ஆர்சிபி அணி இதுவரை ஒருமுறைக் கூட கோப்பை வெல்லாத நிலையில், இந்த முறை தொடர் வெற்றிகளை குவித்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

 

இதனால் ஆர்சிபி அணி இந்த முறை கோப்பையை வெல்வது உறுதி என உற்சாகமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

 

இந்நிலையில் அணியின் வெற்றிக்காக ஆர்சிபி அணி கேப்டன்  ரஜத் படிதார் திருப்பதியில் ஏழுமலையானை தரிசித்துள்ளார். அவருடன் ஜிதேஷ் சர்மா, ஆர்சிபி மகளிர் அணி வீராங்கனை ஷ்ரெயங்கா பாட்டில் ஆகியோரும் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

அடுத்த கட்டுரையில்
Show comments