Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“தவறாக புரிந்துகொள்ளப்படுகிறார்… ரசிகர்கள் அவரை குறைவாக மதிப்பிடுகிறார்கள்..” –கம்பீர் குறித்து அஸ்வின்!

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2023 (07:17 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் தற்போது பாஜக எம் பி யாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் அவர் ஆர் சிபி அணி வீரரான விராட் கோலியிடம் வார்த்தை மோதலில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் அவர் குறித்து இந்திய ரசிகர்களுக்கே ஒரு கோபமான மனநிலையையே நிலவுகிறது. இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட நபர் கம்பீர் எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி தன்னுடைய யுட்யூப் சேனலில் பேசிய அஸ்வின் "இந்தியாவில் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர். அவர் மிகச்சிறந்த அணி வீரர். மக்கள் அவருக்கு தகுதியானதை விட மிகக் குறைவான மதிப்பை வழங்குகிறார்கள், அவர் எப்போதும் அணியைப் பற்றி சிந்திக்கும் தன்னலமற்ற தனிநபராக இருந்தார்" என்று பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments