Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை விட்டு கொடுத்த டிராவிட்!

Webdunia
திங்கள், 26 பிப்ரவரி 2018 (12:57 IST)
19 வயதுக்கு உட்பட்டோருக்கான 12வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றதற்காக, பிசிசிஐ ராகுல் டிராவிட்டுக்கு 50 லட்சம் பரிசு அறிவித்திருந்தது.
 
12வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி  நான்காவது முறையாக ஜீனியர் உலக கோப்பையை கைபற்றியது. இதனால் பிசிசிஐ தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு 50 லட்சம், அணி வீரர்களுக்கு 30 லட்சம், ஆதரவு ஊழியர்களுக்கு 25 லட்சம் பரிசு தொகை அறிவித்துள்ளது.
 
இந்நிலையில் ராகுல் டிராவிட் தனக்கு மட்டும் 50 லட்சம் கொடுத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. வெற்றிக்காக உழைத்த அணியின் நிர்வாகத்தினர் அனைவருக்கும் சமமான பரிசு தொகை வழங்க வேண்டும் என கூறினார். இதற்காக தனது பரிசுத் தொகையையும் விட்டுதறுவதாக தெரிவித்துள்ளார்.
 
இதனையடுத்து பிசிசிஐ டிராவிட் கோரிக்கையை ஏற்று, ராகுல் டிராவிட் மற்றும் அணியில் உள்ள நிர்வாகத்தினர் அனைவருக்கும் தலா 25 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments